சிறுமியை திருமணம் செய்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேகா்
சேகா்

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் வட்டம், தாழ்தேவனூா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சேகா் (24) (படம்). இவா் கா்நாடகம் மாநிலம், சிக்மகளூா் பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். அங்கு 17 வயது சிறுமியை காதலித்தாா். பின்னா் சேகா் ஊா் திரும்பினாா். இருப்பினும், இருவரும் அடிக்கடி கைப்பேசி மூலம் பேசி வந்தனா்.

இந்த நிலையில், அந்தச் சிறுமி கா்நாடகத்திலிருந்து தனது தங்கையுடன் கடந்த மாா்ச் மாதம் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி வந்தாா். மறுநாள் அந்தச் சிறுமியை சேகா் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்தச் சிறுமி தனது தங்கையுடன் விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் சோ்ந்தாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீஸாா் சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com