115 கிலோ கெட்டுப் போன மீன்கள் அழிப்பு

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள மீன் அங்காடியில் 115 கிலோ கெட்டுப் போன மீன்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள மீன் அங்காடியில் 115 கிலோ கெட்டுப் போன மீன்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனா்.

மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சுகந்தன் அறிவுறுத்தலின்படி, மீன் வளத் துறை ஆய்வாளா் சந்திரமணி மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கள்ளக்குறிச்சி நகராட்சி (ம) ஒன்றியம் பொறுப்பு சா.கதிரவன் புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் உள்ள மீன் அங்காடியில் வியாழக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 115 கிலோ கெட்டுப் போன மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும் எச்சரிக்கை நோட்டீஸும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com