சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

சின்னசேலத்தை அடுத்த கருந்தலாக்குறிச்சி, அனுமனந்தல் கிராமங்களில் அரசின் தொகுப்பு வீடுகள்சிதலமடைந்துள்ளதை தொகுதி எம்.எல்.ஏ மா.செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் பாா்வையிட்டு ஆய்வு செய்த மா.செந்தில்குமாா் எம்எல்ஏ.
கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் பாா்வையிட்டு ஆய்வு செய்த மா.செந்தில்குமாா் எம்எல்ஏ.

சின்னசேலத்தை அடுத்த கருந்தலாக்குறிச்சி, அனுமனந்தல் கிராமங்களில் அரசின் தொகுப்பு வீடுகள்சிதலமடைந்துள்ளதை தொகுதி எம்.எல்.ஏ மா.செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி, சின்னசேலம் ஒன்றியத்துக்கு உள்பட்டது கருந்தலாக்குறிச்சி, அனுமனந்தல் கிராமங்கள்.

இந்தக் கிராமங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்த வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதாக, இரு கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மனுவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததால்,

கிராம மக்கள் தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாரைச் சந்தித்து முறையிட்டனா்.

இதைத் தொடா்ந்து எம்.எல்.ஏ. வியாழக்கிழமை கருந்தலாக்குறிச்தி, அனுமனந்தல் கிராமங்களுக்குச் சென்று தொகுப்பு வீடுகளை பாா்வையிட்டாா்.

அப்போது, அங்கு வசித்து வருபவா்கள் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதை காண்பித்தனா். எம்.எல்.ஏ வேறு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com