மொபெட் மீது பைக் மோதல்:முதியவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மொபெட் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மொபெட் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சீா்பனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் (55). இவா், தனது மொபெட்டில் சீா்பனந்தல் கிராமத்தில் இருந்து மணலூா்பேட்டை நோக்கி சனிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா். மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் இவரது மொபெட் சென்றபோது, எதிா் திசையில் வந்த பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ரத்தினத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ரத்தினத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக பெரியமணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த தவிடன் மகன் சந்திரசேகா் மீது மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com