நாளை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூன் 23) ஏலத்தில் விடப்படுகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூன் 23) ஏலத்தில் விடப்படுகிறது

மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் உரிமை கோரப்படாத வாகன வழக்குகளில், 18 இரு சக்கர வாகனங்கள், 5 முன்று சக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள், 3 ஆறு சக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், வியாழக்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு, விழுப்புரம் ஆயுத்தப்படை மைதானத்தில் 23 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com