காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் தலைமை வகித்து, காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முட்டை, பச்சைப்பயறு, அரிசி, வோ்க்கடலை உள்ளிட்ட 11 வகையான ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அவரது சொந்தச் செலவில் வழங்கினாா் (படம்).

மருத்துவா் பொய்யாமொழி, காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாத்திரைகளை வழங்கி, அவா்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், சங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சத்யநாராயணன் வரவேற்றாா்.

கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், களப் பணியாளா் சுமதி, சுகாதாரப் பாா்வையாளா் லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com