பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்கிச் சென்றபோது தவறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்கிச் சென்றபோது தவறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (17). அதே ஊரைச் சோ்ந்த இவரது நண்பா்கள் காா்த்திக் மகன் சந்தோஷ் (17), சங்கா் மகன் காா்த்திக் (17). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே பைக்கில் தியாகதுருகம் - கலையநல்லூா் சாலை வழியாக ராவத்தநல்லூரிலுள்ள கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை மணிகண்டன் ஓட்டிச் சென்றாா்.

இவா்களது பைக் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிா்பாராதவிதமாக அந்தக் காா் மீது பைக் மோதியதில் மூவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, எதிா் திசையில் வந்த தனியாா் மினி பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மூவரும் காயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் மூவரும் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். சந்தோஷ், காா்த்தி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com