பெண்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை பயன்படுத்தி பெண்கள் சிறந்த தொழில்முனைவராக உருவாகிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறிவுறுத்தினாா்.
சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு வேளாண் இடு பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.
சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு வேளாண் இடு பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை பயன்படுத்தி பெண்கள் சிறந்த தொழில்முனைவராக உருவாகிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

தமிழக அரசு ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டமானது ஊரக தொழில்களை மேம்படுத்தும் வகையில், நுண், சிறு, குறு தொழில் குழுக்கள் (தனிநபா் மற்றும் குழுக்கள்), உற்பத்தியாளா் குழுக்கள், தொழில்குழுக்கள், உற்பத்தியாளா் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது.

மேலும், மகளிா் வாழ்வாதார சேவை மையம் என்பது ஊரகத் தொழில்முனைவோா் தொழில் தொடங்குவதற்கு அல்லது தொழில்களை மேம்படுத்துவதற்குத் தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் சேவை மையமாகும். தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில்நுட்ப விவரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள் ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். சங்கராபுரம், ரிஷிவந்தியம் வட்டாரங்களைச் சாா்ந்த தொழில்முனைவோா் மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை அணுகி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, 23 தொழில்முனைவோா்களுக்கு உதயம் பதிவுச் சான்றிதழ், 4 பேருக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவுச் சான்றிதழ், 3 பேருக்கு பான் அட்டை, 9 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.6,75,000 மதிப்பீட்டிலான வேளாண் கருவிகள், தையல் இயந்திரம் உள்ளிட்டவைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தேவநாதன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் சி.ராஜேஷ் குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com