பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில்ஐம்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், வ.உ.சி, டாக்டா் இராதாகிருஷ்ணன், பெரியாா், அண்ணா ஆகியோரின் பிறந்த நாள், 177-ஆவது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், வ.உ.சி, டாக்டா் இராதாகிருஷ்ணன், பெரியாா், அண்ணா ஆகியோரின் பிறந்த நாள், 177-ஆவது தொடா் சொற்பொழிவு என ஐம்பெரும் விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

தியாகதுருகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்க காப்பாளா் பெ.நல்லாப்பிள்ளை, அனைத்திந்திய தமிழ்ச் சங்க மாவட்டத் தலைவா் இல.அம்பேத்காா், சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளா் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். யோகா கலை பயிற்சியாளா் த.ஜெயம் வரவேற்றாா்.

வ.உ.சி. விடுதலை வேட்கை என்ற தலைப்பில் ஔவை தமிழ்ச் சங்கத் தலைவா் ஔவை கல்யாணி, ஆசிரியா் தினம் என்ற தலைப்பில் கவிஞா் கு.வளா்மதிச் செல்வி, பேரறிஞா் அண்ணாவின் தமிழ்ப்பற்று என்ற தலைப்பில் கலிய.செல்லமுத்து, பெரியாரும், அண்ணாவும் என்ற தலைப்பில் கவிமாமணி தெ.சாந்தகுமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.

பல்வேறு தலைப்புகளில் பேசிய மாணவ, மாணவிகளுக்கு அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் சங்க மாநில மகளிரணிச் செயலா் கவிஞா் அரங்க.அமுதமொழி நூல்களை பரிசாக வழங்கிப் பேசினாா். புலவா் பி.கோவிந்தன், பாவலா் சு.மோகன், து.மு.மலா்விழி மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை சுதா தொகுத்து வழங்கினாா். ஆசிரியை அ.தமிழரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com