கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள குடிமைப்பொருள் வட்டாட்சியா் அறையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், அந்தந்த வட்டங்களுக்குள்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.