இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சித்தப்பட்டினம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சித்தப்பட்டினம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சித்தப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் கோவிந்தராஜ் (28). இவரது மனைவி புவனேஷ்வரி. இந்தத் தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 பிள்ளைகள் உள்ளனா்.

இந்தத் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதேபோல, சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டின் முன் உள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள் கோவிந்தராஜை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். இருப்பினும், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com