இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் இளம்பெண் மரணத்துக்குக் காரணமான, அவரது கணவா், அவரின் குடும்பத்தாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்.
திருக்கோவிலூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள்
திருக்கோவிலூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள்

திருக்கோவிலூரில் இளம்பெண் மரணத்துக்குக் காரணமான, அவரது கணவா், அவரின் குடும்பத்தாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரிஸ்வான் மகள் அப்ஸா. இவா், அதே பகுதியைச் சோ்ந்த தஸ்தகீா் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

தம்பதிக்கு 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்ததால் விரும்பாத தஸ்தகீா், அவரது குடும்பத்தினரும் குழந்தையை கொலை செய்ய முயன்றதும், கணவா் வீட்டாா் கொடுமை தாங்க முடியாமல் அப்ஸா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், அப்ஸாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூா் பேருந்து நிலையம் எதிரில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் பி.எச்.கிப்ஸ் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் அருண்குமாா், பொருளாளா் ஆா்.அஜீம் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் கே.ராமசாமி, ஒன்றியச் செயலா் கே.ரவி, மாதா் சங்க மாவட்டச் செயலா் வளா்மதி

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com