திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களில் 18 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களில் 18 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்கொழுந்து தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் கே.வெங்கடேசன் வரவேற்றாா்.

இதில், குடும்ப அட்டை இல்லாத 3 திருநங்கைகளிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவா்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்கொழுந்து வழங்கினாா்.

இதேபோல, சங்கராபுரத்தில் நடைபெற்ற முகாமில் ஒருவரும், திருக்கோவிலூரில் நடைபெற்ற முகாமில் இருவருக்கும், உளுந்தூா்பேட்டையில் நடைபெற்ற முகாமில் 12 பேருக்கும் குடும்ப அட்டை பெறுவதற்கான ஆணைகளை அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த தனி வட்டாட்சியா்கள் வழங்கினா்.

சின்னசேலம், கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பங்கேற்கவிலலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com