சத்துணவு ஓய்வூதியா்கள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பகண்டை கூட்டுச்சாலையில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவா் முனியப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் அம்மாசி, செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சங்கச் செயலா் செல்வராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ம.பொன்னுசாமி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, குடும்பப் பாதுகாப்பு நிதி, கட்டணமில்லா பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். காலித் தட்டுகளை கைகளில் ஏந்தியவாறு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com