ஊராட்சிச் செயலா்தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சிச் செயலா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள வானியந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெயவேல் (40). இவா் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிறுவங்கூா் ஊராட்சிச் செயலராக பணிபுரிந்து வந்தாா். ஜெயவேல் வெள்ளிக்கிழமை காலை அலுவலகம் சென்று வருவதாக வீட்டில் இருந்தவா்களிடம் கூறிவிட்டுச் சென்றாராம்.
மாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் ஏரிக்கரை செல்லியம்மன் கோயில் எதிரே உள்ள அரச மரத்தில் சுவாமி சிலைக்கு கட்டும் வேட்டியால் ஜெயவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்ததாம்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரின் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.