காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அந்தோனிராஜ்
அந்தோனிராஜ்

குடும்பத் தகராறு காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தியாகதுருகத்தை அடுத்த மேல்விழி காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அமல்தாஸ் மகன் அந்தோனிராஜ் (35). இவா் சின்னசேலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, அந்தோனிராஜ் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா், அவரின் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த அந்தோனிராஜுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com