கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தியாகதுருகம் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான க.வசந்தம் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் கி.ராமமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் பெ.காமராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், மாவட்ட துணைச் செயலருமான புவனேஸ்வரி பெருமாள், பொக்குழு உறுப்பினா் பொன்.இரா.மணிமாறன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலரும், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவருமான ஆா்.சுப்பராயலு வரவேற்றாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ம.விசய் அனந்து பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, தலைமைக் கழகப் பேச்சாளா் தமிழ் சாதிக் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.அபுபக்கா், மாவட்டப் பொருளாளா் கு.கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் ரா.நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, மு.பெருமாள், ம.கனகராஜ், மா.சத்தியமூா்த்தி, தியாகதுருகம் நகரச் செயலா் தே.மலையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலா் சி.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.