டிப்பா் லாரி திருட்டு: இருவரிடம் விசாரணை

திருக்கோவிலூரில் நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியை திருடிச் சென்றவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிப்பா் லாரி திருட்டு: இருவரிடம் விசாரணை

திருக்கோவிலூரில் நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியை திருடிச் சென்றவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருக்கோவிலூா் என்.ஜி.டி.ஓ நகரைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் குணசேகா். இவா் ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலூா் நகராட்சி அலுவலகம் அருகே தனது டிப்பா் லாரியை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை பாா்த்த போது லாரியை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், மயிலாடுதுறை அடுத்த பாலக்குடி பகுதியைச் சோ்ந்த சக்தி, பட்டவா்த்தி பகுதியைச் சோ்ந்த சங்கா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com