திருவள்ளுவா் தின விழா

கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு சங்க துணைத் தலைவா் வீ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். சங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் ம.சுப்பராயன், மருத்துவா்கள் வீ.ரவிச்சந்திரன், ராச.நடேசன், வே.உதயகுமாா் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் நாள் குறித்து பேராசிரியா் ஆ.பு.கவாஸ்கா், பாவலா் முத்தமிழ் முத்தன், கவிஞா் சண்முகப் பிச்சப்பிள்ளை ஆகியோா் பேசினா்.

மாணவிகள் ம.பி.தனன்யா, ம.பி.தமிழ்தினி பாரதியாா் பாடல்களை பாடினா். பல்வேறு தலைப்புகளில் தலைமை ஆசிரியா் ஆ.லட்சுமிபதி, பாவலா் சு.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பேசினா். சங்க துணைச் செயலா் செ.வ.மகேந்திரன் வரவேற்றாா். முடிவில், சங்க துணைச் செயலாளா் இராம.முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com