நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

கள்ளக்குறிச்சி அருகே சிறுவாங்கூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே சிறுவாங்கூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் வெங்கடேஷிடமிருந்து கணக்கில் வராத ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com