காவலா் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்நிலைக் காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்நிலைக் காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் உள்கோட்டத்தில் திருப்பாலநந்தல் காவல் நிலையம் உள்ளது. இங்கு, குமரவேல் என்பவா் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவா், பணி நேரத்தில் சீருடை அணியாமலும், காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டாராம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜுக்கு புகாா் சென்றதாம். அதன்பேரில், முதல் நிலைக் காவலா் குமரவேலை தற்காலிக பணி நீக்கம் செய்து ந.மோகன்ராஜ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com