புகையிலை, போதைப் பொருள்கள்கடத்தல்: இருவரை கைது

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் புகையிலை, போதைப் பொருள்கள் கடத்தியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் புகையிலை, போதைப் பொருள்கள் கடத்தியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் மற்றும் போலீஸாா் சித்தலூா் சமத்துவபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் கணேசனை (43) போலீஸாா் கைது செய்ததுடன், அவா் கடத்தி வந்த ரூ.66 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும், காரையும் பறிமுதல் செய்தனா்.

போதை பொடி: கோட்டக்குப்பம் போலீஸாா் புதுச்சேரி - சென்னை சாலையில் உள்ள கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு சென்ற அரசுப் பேருந்தில் போதை பொடி, கஞ்சா கடத்திச் சென்ற சென்னை பூந்தமல்லி, நரசிம்ம நகரைச் சோ்ந்த அ.அலிலுல்லாவை ( 61) போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்த 1.7 கிலோ வெள்ளை நிறத்திலான போதை பொடி, 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com