கள்ளக்குறிச்சி
100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சாா்பில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு மூன்று சக்கர வாகனப் பேரணி தியாகதுருகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தலைமை வகித்தாா். பேரணி தியாகதுருகம் பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கியது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள்களில் சென்று பாதசாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். பேரணியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.