கள்ளக்குறிச்சி
உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை
கள்ளக்குறிச்சி, மே 4: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க சனிக்கிழமை அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் பழனிசாமி (57). இவா், சுவாசக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருக்கோவிலூா் அடுத்த காட்டுப்பையூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவரது உடலுக்கு திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோஜ்குமாா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் 7 காவலா்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.