பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
சங்கராபுரம் அருகே பைக் மீது அரசு நகரப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மஞ்சபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன் மகன் சேவி (51). சங்கராபுரம் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா், திங்கள்கிழமை தனது பைக்கில் பூட்டை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, சங்கராபுரம் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து சேவியின் பைக் மீது மோதியது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் சேவி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரசுப் பேருந்து ஓட்டுநரான எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராமச்சந்திரன் மீது சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.