புதுச்சேரி ஜிப்மரில் 2-வது ஆண்டாக ஓவியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
இதில் ஜிப்மர் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். வரும் 26-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. மேலும், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 25-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது.