புதுச்சேரியில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் வியாழக்கிழமை புகுந்து கணினியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுவை உருளையன்பேட்டையில் மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு லியாழக்கிமை சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண் வந்து தனது மகனுக்கு கடவுச்சீட்டு எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த கண்காணிப்பாளர், உங்களுக்கு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம். உங்கள் மகனுக்கு வழங்க முடியாது. அதில் சட்ட சிக்கல் உள்ளது எனக் கூறியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் அங்கிருந்த 2 கணினிகளைத் தள்ளி சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, கடவுச்சீட்டு அலுவலக கண்காணிப்பாளர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பெயர் செலின் ஜோசப் ஜெயராஜ் என்பதும், அவர் சிறிது மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்தது. போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.