இரண்டாவது நாளாக தனியார் நகைக் கடையில் வருமான வரித் துறையினர் சோதனை

புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லரி மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை

புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லரி மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி கொசக்கடை வீதியில் லட்சுமி ஜூவல்லரி உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலை முதல் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். லட்சுமி ஜூவல்லரி, வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல, கடலூர், சிதம்பரத்தில் உள்ள அவர்களது கிளை அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாலை வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை முதல் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதுச்சேரி கொசக்கடை வீதியில் உள்ள லட்சுமி ஜூவல்லரி மற்றும் அவர்களது கிளை நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித் துறையினர் தொடர்ந்து நடத்தி வரும் சோதனையால், புதுச்சேரியில் உள்ள நகைக் கடை அதிபர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com