பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

புதுவை மாநில அளவில் நடைபெற்ற படைப்பாற்றலுக்கான குழந்தைகள் விருது போட்டியில் வெற்றி பெற்ற

புதுவை மாநில அளவில் நடைபெற்ற படைப்பாற்றலுக்கான குழந்தைகள் விருது போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
புதுவை ஜவஹர் சிறுவர் இல்லத்தின் சார்பில், அண்மையில் நடைபெற்ற மாநில அளவில் படைப்பாற்றலுக்கான குழந்தைகள் விருதுகளை அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் வென்றனர்.
அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிகள் அ.போபி இமாகுலேட் படைப்பாற்றல் நிகழ்கலை நடனப் பிரிவிலும், மாணவி சண்முகப் பிரியா படைப்பாற்றல் கலை ஓவியம் பிரிவிலும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஐந்தாம் வகுப்பு மாணவர் புவியரசு ஒவியப் போட்டில் முதல் பரிசும், லூர்து அகாதமி பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.சங்கீதா வாசித்தல் போட்டியில் முதல் பரிசும் பெற்றனர். பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகளை அந்தப் பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி சனிக்கிழமை பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com