புதுவை பிரதேச காங்கிரஸ் சட்டப் பிரிவின் தலைவராக சத்தியவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை காங்கிரஸில் நீண்ட காலமாக உழைத்து வருபவர்களுக்கு கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுக்கு தலைவராக வழக்குரைஞர் சத்தியவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக கட்சித் தலைமை வெளியிட்ட உத்தரவை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்திருந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அல்ஜோ ஜோசப், ஜெபிமேத்தர் ஆகியோர் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் சத்தியவேந்தனிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.