பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தனது கட்செவி அஞ்சல் மூலம் அவர் வெளியிட்ட உத்தரவு: முழு அடைப்பு போராட்டத்தின் போது பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது உரிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அறியாமையால் செய்துவிட்டோம் என்று கூறி தப்பிக்க முடியாது என போலீஸார் எச்சரிக்கை அறிவிப்புகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.