உலக சுற்றுலா தினம் கொண்டாட முடிவு

காரைக்காலில் உலக சுற்றுலா தினம் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

காரைக்காலில் உலக சுற்றுலா தினம் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவது குறித்து பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  பல்வேறு கல்லூரிகளின்  முதல்வர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, பலவிதமான ஆலோசனைகளை வழங்கினர்.
வருகிற 27 மற்றும் 
28-ஆம் தேதி காரைக்காலில் சுற்றுலா தினத்தை விமரிசையாக கொண்டாடுவது எனவும், 27-ஆம் தேதி காரைக்காலில் ஆட்டோ பேரணி நடத்துவது, 28-ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ ,மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளை  நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com