சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி

புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு காரைக்காலில் இந்து இயக்கங்களின் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் 

புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு காரைக்காலில் இந்து இயக்கங்களின் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கே.எஸ். விஜயன் தலைமை வகித்து பேசுகையில், இந்த  தற்கொலைத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்குப் புகலிடம் கொடுத்து ஆதரித்துவரும் பாகிஸ்தான் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்.எஸ்.எஸ் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சிவானந்தம்,  இந்து முன்னணி துணைத் தலைவர் ஜி. வைத்தியநாதன்,  வெங்கடாசலம், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் என்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
பலியான 42 வீரர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் வீரர்களின் உருவப் படத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்,  பொதுச்செயலாளர் கே.முருகதாஸ், ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் எஸ்.கணேஷ், தயாளன், பாஜக மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் செந்திலதிபன்,  முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜவேலு, இந்து முன்னணி தலைவர் கே. ஜெய்சங்கர், பொருளாளர் கே. செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும், காரைக்கால் கைலாசநாதர் கோயில் மேற்கு கோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com