புதுவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளுநருடன் சந்திப்பு

புதுவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

புதுவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
 2006-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அசோக்குமார், 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.அருண் ஆகியோர் புதுவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அந்தமான் நிகோபர், தில்லி, அருணாச்சலபிரதேசத்தின் பல்வேறு பணியிடங்களில் பணியாற்றியுள்ளனர்.
 தன்னை சந்தித்த இரு அதிகாரிகளையும், புதுவை மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றும்படி ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.  புதுவை அரசின் இணையதளங்களையும், ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்ட புத்தகங்களையும் படித்துப்  பார்த்து புதுவையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com