புதுச்சேரி அருகே தனியார் கிடங்கில் கதவை பழுது பார்த்த போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டில் உள்ள தனியார் கிடங்கில் ஷட்டர் பழுதான நிலையில், விழுப்புரம் மாவட்டம், பாப்பனப்பட்டு திரெளபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சபாபதி (26) அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராத விதமாக ஷட்டரில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தாராம்.
இதனால், பலத்த காயமடைந்தவரை உடனே மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.