அரியாங்குப்பத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரளா (45). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணம் ஆன நிலையில், மற்றொரு மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.
ஆனால், இதற்கான பணத்தை ராமசாமி ஏற்பாடு செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ராமசாமிக்கும், சரளாவுக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதில், மனமுடைந்த சரளா தூக்கிட்டுத் தற்கொலை முயன்றதாகத் தெரிகிறது.
இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.