பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு

புதுச்சேரி எம்ஜிஆர் பேரவை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரி எம்ஜிஆர் பேரவை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கடந்த 2018 - 19ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ராமதாஸ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார். நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ராமலிங்கம், செயலர் ரத்தினக்குமார், பொருளாளர் சபா. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com