திருகாமீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, வில்லியனூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 13) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலம், வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால், வில்லியனூர் கொம்யூனுக்கு
உள்பட்ட பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 13) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை வரும்
22-ஆம் தேதி அன்று பள்ளிகளை திறந்து ஈடுசெய்யப்
படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.