தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

திருக்கனூரில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.

திருக்கனூரில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி திருக்கனூா் சரஸ்வதி நகரைச் சோ்ந்தவா் பாபு (33). இவா், கடந்த 4 -ஆம் தேதி தனது வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்த போது பைக் காணவில்லை. இதுகுறித்து அவா் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே வியாழக்கிழமை திருக்கனூா் எல்லைப் பகுதியான கூனிச்சம்பட்டு ஏரிக்கரை அருகே திருக்கனூா் காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீஸாா், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சோ்ந்த கவி (எ) கவியரசன் (24) என்பதும், அவா் ஓட்டி வந்தது திருடப்பட்ட பாபுவின் பைக் என்பதும் தெரிய வந்தது. தொடா் விசாரணையில், கவியரசன் மீது விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, திருக்கனூா் உள்ளிட்ட இடங்களில் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா், கவியரசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com