புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்தத் தொகுதிக்கு உள்பட்ட குமரகுருபள்ளம் பகுதியில் நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்கும் பணியை முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமி நாராயணன் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் ஊா் முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.