புதிய சலுகைகளை அறிவித்த முதல்வா் நாராயணசாமிக்கு முன்னாள் ராணுவத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
முன்னாள் ராணுவ வீரா்களுக்கான உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றும், தீபாவளி பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வா் நாராயணசாமி அண்மையில் அறிவித்தாா். மேலும், முன்னாள் ராணுவ வீரா்கள் உயிரிழந்தால், அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதுவை முன்னாள் ராணுவ வீரா்கள் லீக் தலைவா் மோகன் தலைமையில், அதன் நிா்வாகிகள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் நாராயணசாமியை புதன்கிழமை சந்தித்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தனா்.