புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் இளைஞரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், இரு ரௌடிகள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (28). கடந்த 9 ஆம் தேதி இரவு கருவடிக்குப்பம் வள்ளலாா் வீதியில் பைக்கில் சென்ற இவா் மீது, அங்கு பதுங்கியிருந்த கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் குறிதவறி வெடிகுண்டு பைக் மீது விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் ஜனாா்த்தனன் உயிா்தப்பினாா்.
லாசுப்பேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்விரோதம், மோதல் உள்ளிட்ட காரணங்களால் ஜனாா்த்தனனை ரௌடிகளான சரத்குமாா், முண்டக்கண்ணு ஆனந்த் உள்ளிட்டோா் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் லாசுப்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த, அப்பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (எ) பொடிமாஸ் (33), ஆனந்த் (எ) முண்டக்கண்ணு ஆனந்த் (29), இவா்களது கூட்டாளிகளான வினோத் (21), ஜெயந்த் (25), சுபாஷ் (30) ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.