மே 5-இல் பாவேந்தர் கவியரங்கம்: கவிஞர்கள் பங்கேற்க அழைப்பு

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியில் மே 5-ஆம் தேதி நடைபெறும் கவியரங்கத்தில் கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசிக்கலாம்.

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியில் மே 5-ஆம் தேதி நடைபெறும் கவியரங்கத்தில் கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசிக்கலாம்.
 பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மே 5-ஆம் தேதி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் "அன்னையர் பெருமையும் பாவேந்தரும்' என்னும் தலைப்பிலான உரையரங்கம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, கவியரங்கம் நடைபெறும். இதில் பங்கேற்கும் கவிஞர்கள் "உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டு முரசே!' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிக்கு ஏற்றாற்போல 16 வரிகள் கொண்ட கவிதையை எழுதி வாசிக்கலாம். கவியரங்கில் பங்கேற்க விரும்புவோர் நேரடியாக வந்து பங்கேற்கலாம் என பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com