புதுச்சேரி சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை வார்டர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி சிறைத் துறையில் காலியாக உள்ள 21 ஆண் சிறை வார்டர் இடங்களுக்கும், 5 பெண் சிறை வார்டர் இடங்களுக்கும் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகள் மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறை வார்டர் பணியிடங்களுக்கு பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதியைப் பெற்று 20 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு http//recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் மே 24 -ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் நிறைவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கான தேர்வு முடிவுகளும் இணையத்திலேயே வெளியிடப்படும் என புதுவை சிறைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.