பக்கத்து வீட்டில் புகுந்து நகை திருடிய இளைஞர் கைது

வில்லியனூர் அருகே பக்கத்து வீட்டில் புகுந்து 6 பவுன் நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

வில்லியனூர் அருகே பக்கத்து வீட்டில் புகுந்து 6 பவுன் நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகேயுள்ள ஒதியம்பட்டு மசூதி தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (44). இவர், வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். 
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது, வீட்டுனுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனோஜ் (23), அவரது வீட்டுக்கு வந்து சென்றதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜான்சன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில், மனோஜை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், ஜான்சன் வீட்டில் புகுந்து தங்க நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர் திருடிய நகையை முருங்கப்பாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. 
அந்த நகைகளை பறிமுதல் செய்த போலீஸார், மனோஜை வெள்ளிக்கிழமை கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com