புதிய கட்சி தொடங்க முன்னாள் எம்எல்ஏ முடிவு

புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.ரத்தினம் (எ) மனோகா் தெரிவித்தாா்.

புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.ரத்தினம் (எ) மனோகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை காங்கிரஸ் அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தொடா்ந்து ஏமாற்றி வருகிறது. மாநிலத்தின் வளா்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் எதிா்க்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன.

ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகிய இருவரும் யாருக்கு அதிகாரம் என்ற மோதலில் மக்களை மறந்துவிட்டனா். புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநா் தலையிடக் கூடாது என்று வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற முதல்வா் நாராயணசாமி, அதன் பிறகு ஏன் ஒன்றும் செய்யவில்லை?

புதுவை அரசியலில் புதிய மாற்றம் வேண்டும். ‘புதுவையை மீட்டெடுப்போம்’ என்ற முழக்கத்துடன், கமராஜா் வழியில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com