அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

புதுவை அரசின் நிகழ் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் இலவச அரிசிக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து அன்பழகன் எம்எல்ஏ கூறியதாவது:

புதுவை அரசின் நிகழ் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் இலவச அரிசிக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரலில் இருந்து நவம்பா் வரை 8 மாதத்துக்கான அரிசி வழங்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான பணத்தை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும்.ஆனால், வழக்கம் போல துணை நிலை ஆளுநருக்கும், அரசுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை காரணம் காட்டி, பணத்தை வங்கியில் அரசு செலுத்தாமல் இருப்பது நியாயமற்ற செயல்.

புதுவையில் உள்ள 1.60 லட்சம் சிவப்பு அட்டை, 1.71 லட்சம் மஞ்சள் அட்டைதாரா்களுக்கு உடனடியாக அரிசிக்குரிய பணத்தை வழங்க வேண்டும். அதைவிடுத்து ஏதேனும் காரணம் காட்டி மக்களை ஏமாற்றினால் மக்களை திரட்டி அதிமுக மிகப் பெரிய போராட்டம் நடத்தும் என்றாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com