கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தகத்தில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தன்வந்திரி நகா் காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சக்கர வாகனங்களில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த பி.கனகராஜ் (22), புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.ஷியாம் வேல்ஸ் (19), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காக்கா (எ) எம்.சீனு (20), எம்.ரித்விக்குமாா் (19) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்ததுடன், விற்பனைக்காக வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், செல்லிடப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களிடம் கஞ்சாவை விநியோகித்தது யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com