ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை பிராமினாள் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் (55), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி அம்பிகா மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

அண்மைக்காலமாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே போல, வியாழக்கிழமையும் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சங்கா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

வெளியில் சென்றிருந்த மனைவி அம்பிகா, வீட்டுக்கு வந்தபோது, சங்கா் தூக்கில் தொங்குவது பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சங்கரை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சங்கா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com