தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்த பணிகளை வழங்கக் கோரிக்கை

தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலர் அஸ்வனி குமாரிடம்,  அந்தக் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் சனிக்கிழமை அளித்த மனு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்.சி.எஸ்.பி., டி.எஸ்.பி.) துணைத் திட்ட நிதியின் மூலம் ஆதிதிராவிடர் மேம்பாட்டு  வரைநிலைக்கழகம் (பாட்கோ) தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. அவ்வாறான ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பங்கு பெற முடியாத நிலை உள்ளது.
ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி குடியிருப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒப்பந்தங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களே பங்குபெறும் வகையில் அரசாணை உள்ளது.
இதைப் பின்பற்றி, புதுவையிலும் பாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்  பங்கு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com